Tuesday, May 22, 2012

உட்காருங்க. உட்காருங்க.

முக்கிய டிஸ்கி: வழக்கம்போல் லேபிளை முதலில் படித்து விடவும். பின்னர் வருத்தப்படக் கூடாது.

அடடே. வாங்க வாங்க.

வந்துட்டேன். நலமா?

நலமே. நீங்க?

நானும் நலமே.

உட்காருங்க.

இல்லே முதல்லே நீங்க உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

அட சொல்ற பேச்சை கேளுங்க. மரியாதையா உட்காருங்க.

என்னங்க. நீங்க பெரியவங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

எனக்கு வேலை வாங்கித் தந்த தெய்வம் நீங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

வேலை சரி. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து என் வாழ்க்கையை மங்களகரமா துவக்கி வெச்ச நீங்கதான் முதல்லே உட்காரணும்.

இது சரிப்படாது. இப்ப உட்காரறீங்களா இல்லையா?

முடியாதுங்க. நீங்கதான் முதலில்.

இத பார்றா. சொன்னா கேளு.

டேய் @#, நீ கேளுடா மொதல்லே.

டேய் வெண்ணை, முன்னாடி இருந்த வேலையில் நான் நிம்மதியா இருந்தேண்டா. நீ வாங்கிக் குடுத்தே பாரு ஒரு வேலை, @#$ என் நிம்மதியே போச்சு. இவ்வளவும் பண்ணிட்டு இங்கே உட்காரவும் மாட்டேன்னா என்னடா அர்த்தம்?

வெளக்கெண்ணை, சிவனேன்னு தனியா இருந்த எனக்கு ஒரு பொண்ணை.. பொண்ணா அவ... கட்டி வெச்சியே, என்ன பாடு படுத்தறா தெரியுமா? அன்னிலேர்ந்தே நீ என்னிக்கு என்கிட்டே மாட்டுவேன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்போ இங்கே வந்து உட்காரவும் மாட்டேன்னு வம்பு பண்றே?

சரி சரி விடுங்க. சமாதானமா போயிடுவோம்.

ஆமா. நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.

சே. ச்சே. இதென்ன பெரிய பெரிய வார்த்தையா சொல்லிக்கிட்டு.

சரி. உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

***

Read more...

Wednesday, April 11, 2012

நிலநடுக்கம், சுனாமி, கடவுள் மற்றும் சில ட்வீட்டுகள்.


இன்று காலை ட்விட்டரில் நிலநடுக்கம், சுனாமி ட்விட்டுகளுக்கு நடுவே கடவுளைப் பற்றிய ஒரு விவாதமும் ஓடிக்கொண்டிருந்தது. யாரு கேக்கறாங்களோ இல்லையோ, யாரு படிக்கறாங்களோ இல்லையோ, ஒரு டுமீல் ட்விட்டராய் நம் கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். போட்டேன் பல ட்வீட்டுகள்.


ஆனா பாருங்க, ஒவ்வொரு முறையும் 140 எழுத்துகளை என்னால் எட்ட முடியல. அதனால், இந்த #365Process தளத்தைப் பற்றியும் நடுநடுவே எழுத வேண்டியதாயிடுச்சு.  படிச்சி பாருங்க, உங்களுக்கே புரியும் என் கஷ்டம். மற்றபடி இந்த பதிவின் தலைப்பில் உள்ளவற்றைப் பற்றிய ட்விட்டுகளே இவை. நம்புங்க.


***

கடவுள் உலகை அளந்தாரான்னு தெரிய வேண்டாம்; உங்க செயல்திறனை அளக்க தெரிஞ்சிக்குங்க. உதவிக்கு #365Process

கடவுள் இருந்தா நல்லா இருக்கும். செயல்முறை இல்லேன்னா நாறிடும். அதைப்பற்றி தெரிஞ்சிக்க படியுங்கள் #365Process

நிலநடுக்கம் ஏற்பட்டாலும், செய்யும் வேலையில் மனநடுக்கம் ஏற்படாமல் இருக்க படியுங்கள் #365Process

கடவுள் உண்டு/இல்லை என்பதற்கான காரணங்களை இஷிகாவா வரைபடத்தில் வரைய #365Process படியுங்கள்

12/21/12 அன்று உலகம் அழியாது. ஏன்னா 2/28/13 அன்றுதான் #365Process முடியும்

ஆக்கல், காத்தல், அழித்தல் - செயல்முறையில் இவற்றை சரியா செய்யணுமா? படியுங்கள் #365Process

ஆத்திகர்கள், நாத்திகர்கள் இருவரும் ஒப்புக் கொண்டு படிக்கும் ஒரே தளம்.. #365Process

இப்பவாவது அடுக்ககத்தில் அடுத்த வீட்டில் இருப்பது யார்னு தெரிஞ்சிக்குங்க. இப்பவும் வேணாமா? படிங்க #365Process

வதந்திகளை பரப்பாதீர்கள். உண்மையான செய்திகளை மட்டுமே சொல்லவும். இதையும் செய்தியாக பரப்பலாம். #365Process

பேரிடர் சமயங்களில் தொலைபேசி அலைவரிசைகளை கடலை போட்டு busy ஆக்காதீர்கள். படியுங்கள் #365Process

நிலநடுக்கம் வந்து போனபிறகு வெளியில் சும்மா நிற்பவர்கள் படிக்க சிறந்த தளம். #365Process

அடாது நிலநடுக்கம் வந்தாலும் விடாது பதிவு போடப்படும். #365Process

***


இப்போ உங்களுக்கும் அந்த தளத்தை பார்க்க ஆசை வந்திருக்குமே. இங்கே போங்க.
http://365process.blogspot.com

***

Read more...

Saturday, April 7, 2012

ஹிஹி.. ஒரு விளம்பரம்..


ஏண்டா. அந்த சினிமாக்காரங்கதான் தனக்குத்தானே விளம்பரம் அடிச்சிக்குவாங்க. உனக்கு எதுக்கு இதெல்லாம்?.. இப்படி கவுண்டர் சொன்னது காதில் விழுந்தாலும்.. ஒரு விளம்பரம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


போன வாரம் அலுவலகத்தில் ஒரு நாள் முழுக்க உட்காரவைச்சி ஒரு கூட்டம் போட்டாங்க. அப்போ எல்லாரிடமும், மத்தவங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்களோ, அதில் நல்லதை மட்டும் மூணு விஷயத்தை எழுதி அவங்கவங்க தாளில் ஒட்டுங்கன்னாங்க. நண்பர்கள் என்னைப் பற்றியும் ஏதோ சில விஷயங்களை எழுதியிருக்காங்க. கீழே இருக்கு பாருங்க.


நல்லவேளை நல்லதை மட்டும் எழுதச் சொன்னாங்க. இல்லேன்னா, பயபுள்ளைங்க என்னென்ன எழுதியிருப்பாங்களோ.. இப்ப நினைச்சாலும் கதி கலங்குது!!.


படத்தை க்ளிக் செய்து பெரிசா பாத்து, கவனமா படிங்க. ஏதாவது புரியலேன்னா கேட்கலாம். :-))


நன்றி.


Read more...

Friday, March 9, 2012

மென்பொருள் செயல்முறை பற்றி தெரிந்துகொள்ள ஒரு புதிய தளம்!


மென்பொருள் Process சம்மந்தப்பட்ட விஷயங்களை சொல்லலாம்னு ஒரு #365 தளம் துவக்கியிருக்கேன். தளத்தின் முகவரி: http://365process.blogspot.com. தினம் ஒரு பதிவாக 365 நாட்களுக்கு தொடர்ந்து எழுதலாம்னு ஒரு
எண்ணம். இதில் என்னவெல்லாம் சொல்லப்படும் என்பதை இந்த முதல் பதிவு சொல்கிறது.

http://365process.blogspot.com/#!/2012/02/365process.html

பார்த்து, தொடர்ந்து படித்து, ஆதரவு தருக. நன்றி.

***

டிவிட்டரின் பயன் மற்றொரு முறை தெரிய வந்தது. ஒரு நல்ல technical ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி சொல்லுங்கன்னு

கேட்டேன். படபடவென வந்து விழுந்தன விடைகள். அவை இங்கே. இவை தவிர வேறேதும் இருந்தால், அதையும் சொல்லவும்.

http://dictionary.tamilcube.com/index.aspx

http://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.htm

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

**

எப்படி துவங்கியதுன்னு தெரியல. ஆனா பின்வரும் ட்வீட்ஸ் போலவே பலரும் இன்று டிவிட்டரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் பங்கு இங்கே.

சவுரி. #இழுத்ததில் வந்தது.

கங்குலி சட்டை. #கழட்டியதில் பிடித்தது.

இளவட்டக் கல். #தூக்கியதில் பிடித்தது.

திட்டு. #உடைத்ததில் கிடைத்தது

தவளை. #பிடித்ததில் கடித்தது

மாங்காய் பத்தை. #கடித்ததில் பிடித்தது

***

Read more...

Saturday, March 3, 2012

ட்விட்டர் லிஸ்ட் எப்படி உருவாக்கலாம்?




முக்கியமான டிஸ்கி : இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. ஏன்னா, இதில் நானே சில பிரிவுகளில் வருவேன்!! அதனால், படிச்சிட்டு, டென்சனாகாமே மறந்துடுங்க. (லேபிளையும் ஒரு முறை பார்த்து விடவும்!)


***

ட்விட்டர் TL-ஐ லிஸ்ட் போட்டு பிரித்து வைத்தால், அனைத்து டிவிட்டுகளும் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனா, அந்த லிஸ்ட்களை எப்படி உருவாக்குவது? கீழ்க்கண்டவாறு செய்தால், பலன் இருக்குமான்னு பாத்து சொல்லுங்க.

லிஸ்ட்களின் லிஸ்ட் :


1. இசை-ராசா

2. இசை-ரகுமான்


3. கிரிக்கெட்-சச்சின்

4. கிரிக்கெட்-அசச்சின்


5. கர்நாடக இசை

5a.கர்நாடக இசை-TMK மட்டும்


6. பண்பலையில் பாட்டு போடுபவர்கள் / கேட்பவர்கள் / பாட்டு போடச் சொல்லி கேட்பவர்கள்.

7. இணையத்தில் / யூட்யூபில் பாட்டு கேட்பதை அறிவிப்பவர்கள்.


8. யாஹூ chat (ரெண்டு பேர் மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பர்.)

9. ரயில் வண்டி (ஒரு ஐந்தாறு பேர் தொடர்ந்து பேசுவர். வண்டி பெரியதாகிவிட்டால் twitlongerல் பேசுவர்).


10. போஸ்டர் பாய்ஸ் - புது பதிவு போட்டால் மட்டும் இங்கு வரும் விளம்பரம் ஒட்டுபவர்கள்.

11. Drupal - இதற்கு விளக்கம் தேவையில்லை.


12. தத்துவவாதிகள். (தத்ஸ் எண் போட்டு தொடர்ந்து தாக்குபவர்கள்).

13. இலக்கியவாதிகள் - ஒண்ணும் சொல்றதுக்கில்லை.


இது ஒரு சாம்பிள் பட்டியல்தான். மல்லாக்க விட்டத்தைப் பார்த்து யோசிச்சா இன்னும் பல லிஸ்ட்கள் தோன்றும். பிறகென்ன, அவற்றை உருவாக்கி, அனைத்தையும் படித்து ஜென்ம சாபல்யம் பெறுங்க. அஷ்டே.



***



Read more...

Monday, February 27, 2012

என் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அந்த சுடர்மணி!!



அப்போ எனக்கு பத்து வயசு இருக்கும்.(இப்போ மட்டும் என்ன, ஒரு ரெண்டு மூணு வயசு கூட, அவ்வளவுதான்..). குடும்ப நண்பர்கள் ஒரு இருபது பேர் கிளம்பி பிச்சாவரம் போனோம். போயிட்டு வர்ற வழியில் சிதம்பரம் கோயிலுக்கு போயிருந்தோம். அந்தக் கோயில் குளத்தில் குளிக்க அனைவரும் இறங்கினர். (இப்போ அந்த குளத்தில் குளிக்க அனுமதி இருக்கான்னு தெரியல).


அப்போ எனக்கு நீச்சல் தெரியாது. (இப்போ? ன்னு யாரும் கேட்கப்படாது). அதனால் 'தைரியமா' மேல் படிக்கட்டுலேயே உட்கார்ந்து சொம்புலே (சிம்பு'லே இல்லே) தண்ணி மொண்டு குளிக்க ஆரம்பிச்சேன். (கேவலமாதான் இருந்துச்சு. இதெல்லாம் பாத்தா முடியுமா!). திடீர்னு கால் வழுக்கி சில படிக்கட்டுகள் இறங்கி தண்ணிக்குள்ளே போயிட்டேன். சென்ற ஆட்சியில் குளங்களை சரியாக சுத்தம் செய்யாததால்தான் நான் அப்படி வழுக்கிவிட்டேன்னு எனக்கு இப்போ புரியுது. அம்மா வாழ்க.



இந்த மாதிரி சமயத்தில், 'தலைக்கு மேல் போயாச்சு, ஜான் போனா என்ன, முழம் போனா என்ன'ன்னு பழமொழியெல்லாம் சொல்லக்கூடாது. இன்னும் 'விவரம்' தெரியாது வயசு. 'பாக்க' வேண்டியது எவ்வளவு இருக்கு? அதனால், கையை காலை உதைச்சி (என்னோட கை கால்தான்) அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யறேன்.



ஆனா முடியல. கீழே கீழே போறா மாதிரி இருக்கு. அந்த சிறு குளத்தில் இருக்கிற தண்ணி, ஒரு பெரிய கடல் மாதிரி இருக்கு. லியோ டி காப்ரியோ மாதிரி தண்ணிக்குள்ளே 'ஸ்லோ மோஷன்லே' போறேன். அந்த டைட்டானிக் இறுதிக் காட்சியே ஒரு சின்ன தண்ணித் தொட்டியில்தான் எடுத்தாங்கன்னு சமீபத்தில்தான் எனக்கு தெரிஞ்சுது. (யாருப்பா அது,
தண்ணித் தொட்டின்னவுடனே, தமிழக அரசின் புது சட்டசபையான்னு கேக்கறது? அது எண்ணைத் தொட்டி!!)



நீங்க இங்கே ஜாலியா படிச்சிட்டிருக்கீங்க. நானோ அங்கே தண்ணீரில் மூழ்கி மேலே வர கஷ்டப்பட்டுட்டிருக்கேன். அப்போ திடீர்னு என் கையில் ஏதோ தட்டுப்பட்டது. 'மூழ்கறவன் கைகளுக்கு மாட்டினதெல்லாம் தெய்வம்' என்கிற புதுமொழிக்கேற்ப (திடீர்னு நானே யோசிச்சது!), நான் அதை புடிச்சி மேலே வர முயற்சிக்கிறேன்.



ஆனால், யாரோ மேலேயிருந்து 'அதை' என்கிட்டேயிருந்து விடுவிச்சி, என்னை தள்ளி விடப் பாக்கறாங்க. ஆஹா, இது தற்கொலையோ விபத்தோ இல்லைடா சின்னபையா, இது ஒரு அப்பட்டமான கொலைன்னு நானே (மனசில்) சொல்லிக்கறேன்.



ஆனா, நான் விடலை. (பருவத்தை சொல்லலே. விடவில்லை என்பதை சுருக்கி சொன்னேன்). நல்லா புடிச்சி இழுக்கறேன். கூடவே பக்கத்தில் ஒரு 'கால்' தெரியுது. (ஏன் முழுசா தெரியலியான்னு கேக்கக்கூடாது, நான் சொன்னது நம் உடலின் ஒரு பாகம் - கால்).



நான் டக்குன்னு 'அதை' விட்டுட்டு 'காலை' புடிச்சிக்கறேன். தென்னை மரம் ஏறுவதைப் போல (உடனே மரம் ஏறத் தெரியுமான்னு கேட்ககூடாது, ஏன்னா, அதுவும் தெரியாது. அப்போ எதுதாண்டா தெரியும்னு நீங்க சொல்றது கேக்குது. ம்ம். ) ஏறி ஒருவழியா தண்ணிக்கு மேலே வந்துட்டேன். பிறகுதான் தெரிஞ்சுது, நான் புடிச்சி இழுத்தது, எங்க மாமாவோட ஜ**ன்னு.



இப்போ பதிவோட தலைப்பை ஒரு தடவை படிங்க. 'அது' மட்டும் இல்லேன்னா, நானும் இல்லே. இந்த பதிவும் இல்லே.


சரிதானே?



***



Read more...

Saturday, February 25, 2012

சென்னை பள்ளிகள் - பாகம் 3.


பாகம் 1

பாகம் 2
 

இந்திய பார்லிமென்ட் முதற்கொண்டு நம்ம போயஸ் கார்டனுக்கு உள்ளே கூட போய்விடலாம் (ஹிஹி. நான் அந்த தோட்டத்திலேயே - அம்மா/ ரஜினிகிட்டே இல்லே - ஒரு அலுவலகத்தில், ஆறு மாதம் வேலை பாத்திருக்கேன்!). ஆனால் இந்த பள்ளிகள் உள்ளே நுழைய நாங்க பட்ட பாடு இருக்கே. அப்பப்பா. "ஆமா, ஏகப்பட்ட பசங்க படிக்கிற பள்ளிகள், அதுக்கு பாதுகாப்பு இருக்க வேணாமா" என்று கேட்கலாம். அது சரிதான். அதுக்காக, ஆபீஸ் ரூம், முதல்வர் அறை இதுக்கெல்லாம் கூடவா அனுமதி மறுக்கணும்?



* பிரின்சிபல்தான் வரச்சொன்னாங்க,

* ஆபீஸ் ரூமில் விவரங்கள் விசாரிக்கணும்,

* அப்ளிகேஷன் பாரம் வாங்கணும்,



இப்படி எது சொன்னாலும், வாயிற்காப்போன்களுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை ஒன்றே - 'யாரையும் உள்ளே விடாதே'.



ப்ரீகேஜி அட்மிஷங்களுக்கு மட்டுமே தேதிகள், விவரங்கள், படிவங்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கு விவரங்கள் வேண்டுமா - யாருக்குமே தெரியாது. அந்த கடவுளுக்கே வெளிச்.. சாரி. அவருக்கே தெரிந்திருக்காது.



இந்த அட்மிஷன் வேட்டையில் தெரிந்து கொண்ட விஷயம் ஒன்றுதான். பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் - அவர்கள் அங்கேயே இருபது ஆண்டுகளாக வேலை பார்த்தாலும் - அவர்களுக்கு 'வாய்ஸ்' என்று ஒன்று கிடையாது. 'நான் சொன்னாலெல்லாம் கேக்க மாட்டாங்க. நீங்க ஏதாவது பெரிய ஆளோட ரெகமெண்டேஷன் லெட்டர் கொண்டு வாங்க'.


ஒவ்வொரு பள்ளியிலும் (மொத்தம் நான்கு) ஒவ்வொரு ஆசிரியரை பிடித்தோம். ஒருவராலும் உதவ முடியவில்லை. அதுகூட பரவாயில்லை. விவரங்களும் தெரியவில்லை. அட்மிஷன் கிடைக்குமா, கிடைக்காதா, யாரை பார்க்கணும் - எந்த விவரங்களும் தெரியவில்லை. 'ஆபீஸ் ரூமில் நான் சொன்னா ஒண்ணும் நடக்காது'.



தற்போதைய தமிழக முதல்வர் + அமைச்சரவை நிலைமை மாதிரியே இருக்குது இல்லையா? அனைத்து முடிவுகளும் முதல்வர்தான். ஆனால் அவரோ யாரையும் பார்க்கமாட்டார். எப்போதும் பிஸி. :-)


அட, ஆசிரியர்களை விடுங்க. ஒரு பள்ளியில் 'உதவி தலைமை ஆசிரியர்' கிட்டே பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்கிட்டே விவரங்கள் கேட்டபோது, என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கிறீங்க. கரெக்ட். மேலே சிகப்பு வண்ணத்தில் இருக்கு பாருங்க. அதேதான்.



இவற்றையெல்லாம் தாண்டி அலுவலர்களிடம் பேச வாய்ப்பு கிடைத்தபோது, அவர்கள் சொன்னவைகளில் சாம்பிளுக்கு சில கீழே:



* மாலை நாலு மணிக்கு தொலைபேசுங்க. கண்டிப்பா சொல்றேன். (மூன்றரை மணிக்கே தொலைபேசி சுவிட்ச் ஆஃப்).



* நாளைக்கு பத்து மணிக்கு வாங்க. முடிச்சிடுவோம். (நாளைக்கு அவர் கண்டிப்பாக மட்டம் போட்டிருப்பாரு).



* இவ்வளவு நேரம் பிரின்சிபால் இங்கேதான் இருந்தாரு. பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தீங்கன்னா பாத்திருக்கலாம் (மருத்துவமனைகளில் சொல்வதைப் போல் இருக்கா?)



* நான் ஆபீஸ்ரூமில் சொல்லி வெச்சிடறேன். நீங்க கரெக்டா வந்துடுங்க. (ஆபீஸ்ரூமில் - அப்படி யாரும் சொல்லலியே? நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வாங்க)



சரி விடுங்க. திட்டாமே இப்படியாவது மரியாதையா சொல்றாங்களேன்னு சொல்லாதீங்க. ஒரு இடத்தில் திட்டு கூட வாங்கியாச்சு.



" நாளை காலை பத்து மணிக்கு டாண்ணு(!!) வந்திடுங்க. அப்ளிகேஷன் பாரம் தர்றேன். கொண்டு போய், பூர்த்தி செய்து ரெண்டு நாட்களுக்குள் தந்துடுங்க" என்று சொன்னவரை நம்பி போனால், 'வெள்ளை பேப்பர் கொண்டு வந்தீங்களா? அதில் ஊர், பேர் எல்லாம் எழுதிக் கொடுங்க' என்றார். 'பேப்பர் கொண்டு வரலீங்க. பாரம் தர்றேன்னு சொன்னீங்களே' என்றால், நான் என்ன 'ஸ்டேஷனரி கடையா நடத்தறேன். போற வர்றவங்களுக்கெல்லாம் பேப்பர் கொடுக்க. பத்து நிமிடத்தில் கொண்டு வந்து தந்தா தாங்க. இல்லேன்னா ஒண்ணும் சொல்ல முடியாது'.



இதுவே நானாக இருந்தால், அங்கு நடந்ததே வேறாக இருந்திருக்கும். (யாருப்பா அது, 'வவாச கைப்புள்ள மாதிரியா'ன்னு கேக்கறது?!!). அங்கிருந்தது தங்க்ஸ் ஆகையால், ஒரு கடைக்கு போய், பேப்பர் வாங்கி, எல்லாவற்றையும் எழுதி போய் கொடுத்துவிட்டு வந்தார்.



இப்போதைக்கு இது போதும். தொடர்ந்து அடுத்த பகுதியில்...



Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP